ADVERTISEMENT
இந்தியா முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக உள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால், 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
ADVERTISEMENT
பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை எதுவும் இருக்காது என்ற காரணத்தால், அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல அருகே இருக்கும் ரயில் நிலையங்களில் குவிந்துவருகின்றனர். அதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல குவிந்தனர். அவர்களைக் காவல்துறையினர் தனிமனித இடைவெளியுடன் வரிசையாக உட்கார வைத்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
Show comments