அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
Show comments