ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜா என்பவரால் 2018 ஆம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் மேல் மருவத்தூர் ஏரி 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி கோவிலை ஒட்டியுள்ள நெடுஞ்சாலை மற்றும் நீர்நிலை ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அமர்வு இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
Show comments