ADVERTISEMENT

எடப்பாடி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு!!

08:57 AM Mar 01, 2019 | kalaimohan

ADVERTISEMENT

எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னை திரும்பியது.

ADVERTISEMENT

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு செல்ல இன்று காலை சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி உள்ளது.

பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் இன்று காலை 7.40 மணிக்கு தூத்துக்குடிக்கு அவர் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடத்திலேயே பாதியில் திரும்பியது.

இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் அடுத்து 9.10 மணிக்கு வரவிற்கும் விமானத்தில் மதுரை சென்று அங்கிருந்து கார் மூலமாக குமரி செல்ல இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT