இனாமுல் ஹசன் வரவேற்புரையாற்ற, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளருமான சசிகாந்த் செந்தில் வெளியிட ஜெய்ஜென் பெற்றுக்கொண்டார். விழாவில் அருட்பணியாளர் பார்த்தசாரதி, எழுத்தாளர் இக்பால் அகமது சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு நூல் குறித்து உரையாற்றினர்.
சசிகாந்த் செந்தில் பேசும்போது, “அரசு அதிகாரிகளை, ஐ.ஏ.எஸ்.களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் நேர்மையானவர், ஊழல் செய்யாதவர் என்பார்கள். அப்படி எத்தனையோ அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் அதுமட்டும் போதாது. அதிகாரிகள் தைரியமானவர்களாகவும் இருக்க வேண்டும். அதுதான் தேவை. அந்த வகையில் கிருத்திகா தைரியமானவர். செயலாற்றுபவர். அதனால்தான் அவர் மணிப்பூர் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று, அதை எழுத்திலும் பதிவு செய்திருக்கிறார். இத்தகையவர்கள்தான் நிறைய பேர் தேவை” எனக் குறிப்பிட்டார்.