ADVERTISEMENT

கடன் தொல்லையால் தங்கும் விடுதியில் வாலிபர் தற்கொலை

10:42 AM Jan 24, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் ரீசார்ஜ் கடை நடத்தி வருபவர் வெங்கடேஷ் பாபு. இவர் தான் செய்துவரும் தொழிலுக்காக கடன் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து கடனைத் திருப்பி கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் குடும்பத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் பாபு கடந்த இருபத்தி ஒன்றாம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு புறப்பட்டு வந்து, அங்குள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதியம்வரை அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதியின் ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவருடைய உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT