ADVERTISEMENT

7 பேரை விடுதலை செய்யக்கோரி ஆளுநருக்கு அஞ்சல் அட்டை!!

02:47 PM Oct 04, 2018 | jeevathangavel

சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை மக்கள் சிவில் உரிமை கழகம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தற்போது தமிழகம் முழுக்க உள்ள மக்கள் ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வருகிறார்கள். அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியும், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும் ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என எழுதியுள்ளார்கள்.

இன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் ஆண்கள், பெண்கள் நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டைகளை தமிழக ஆளுநருக்கு அனுப்பினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT