இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் மழை பாதித்த இடங்களில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு கொட்டப்பட்டதாக புகார் எழுந்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் பகுதி நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்காக ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. நோய்த் தொற்றை தவிர்க்கும் வகையில் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்ட நிலையில் வைத்தீஸ்வரன் தெரு, ஆரம்ப சுகாதார நிலையம் பகுதிகளில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள் மைதா மாவை போட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சர்ச்சை பெரிதான நிலையில் திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், 'தூய்மை பணிகளுக்காக தூவப்படும் பிளீச்சிங் பவுடரில் சுண்ணாம்பு கலந்து மூட்டைகளை கட்டும் பொழுது தவறுதலாக மாறி இருக்கலாம். அதில் மைதா மாவு கலக்கப்படவில்லை' என விளக்கம் அளித்துள்ளார்.