ADVERTISEMENT
கடற்கரையில் சிதறிக்கிடந்த பாறை குன்றுகளை சிற்பங்களாகவும் குடவறை கோயில்களாகவும் செதுக்கி மாமல்லபுரம் என்னும் சிற்ப நகரம் உருவாக்கப்பட்டது. தமிழர்களின் கலாச்சார மற்றும் வரலாற்று ஆவணமாகவும், நமது முன்னோர்களின் மிக சிறந்த கலை திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிற மாமல்லபுரம் பல காலங்களாக சரியான பராமரிப்பு இல்லாமல் பொழிவிழந்து காணப்பட்டது. தற்போது சீன அதிபர் வருகைக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் மாமல்லபுரம் புதுப்பொழிவுடன் காணப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் மாமல்லபுரத்தை இப்படி தூய்மையாய் காண்பதும், இரவு நேரத்தில் மின்விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலிக்கிற சிற்பங்களை காண்பதும் மகிழ்ச்சியே. இதே பராமரிப்பும் தூய்மையும் எப்போதும் நீடிக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT