இதற்காக திமுக,கம்யூ, மதிமுக, விசிகே உள்ளிட்ட தோழமை கட்சிகள் நிர்வாகிகள் கொண்டு தேர்வு குழு அமைக்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தங்களுடைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்தி எஸ்.ஆர்.எம். கல்வி குழுமம், எஸ்.ஆர்.எம்.நகர், பொத்தேரி, காஞ்சிபுரம் மாவட்டம் - 03 என்கிற அலுவலக முகவரியிலோ, நேரிலோ அல்லது இணைதளத்திலோ பதிவு செய்து கொள்ளலாம்.
இதே போன்று சட்டசபை தொதிக்கு 50 பேர் வீதம் 6 தொகுதிக்கு 300 பேருக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். முசிறி, பெரம்பலூர் உள்ளிட்ட 3 இடங்களில் எம்.பி. அலுவலகம் திறக்கப்படும் என்றார். டெல்லி பாராளுமன்ற சென்ற பின்பு முதலில் விசயங்களை தெரிந்துகொண்டு அதன்பிறகு தொகுதி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஐ.ஜே.கே. திருச்சி மாவட்ட தலைவர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.