கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரத்தில்- நாகப்பட்டினம் மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலைக்கு விளை நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கையகப்படுத்தும் நிலங்களுக்கு மிகக்குறைந்த அளவில் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதை கண்டித்தும், தற்போது மதிப்பின்படி நிலத்திற்கு பணம் ஒதுக்க கோரிம் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தற்போது அந்த இடம் செண்டு ஒரு லட்ச ரூபாய் விதம் விற்பனையாகிறது. கூடுதல் இழப்பீடு தொகை வழங்கிடகோரியும், தென்னைமரம் உள்ளிட்டவைகளுக்கு தனி இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு மாற்று இடம் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து சிதம்பரம் சார் ஆட்சியரின் உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
ADVERTISEMENT
ADVERTISEMENT
தற்போது அந்த இடம் செண்டு ஒரு லட்ச ரூபாய் விதம் விற்பனையாகிறது. கூடுதல் இழப்பீடு தொகை வழங்கிடகோரியும், தென்னைமரம் உள்ளிட்டவைகளுக்கு தனி இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு மாற்று இடம் வாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இது குறித்து சிதம்பரம் சார் ஆட்சியரின் உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
Show comments