ADVERTISEMENT

மனைவிக்கு வாழ்நாள் முழுமைக்கும் தண்டனை தந்த கணவன்!

05:29 PM Feb 09, 2019 | raja@nakkheeran.in

ADVERTISEMENT


திருவண்ணாமலை மாவட்டம், அரசிக்கு புகழ்பெற்ற களம்பூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஏந்துவாம்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கீதா என்கிற மனைவியும், 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது கிரிஜா, 5 வயதான ஆர்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். ரமேஷ் சென்னையில் தங்கி கட்டிடங்களில் கம்பி கட்டும் சென்டரிங் வேலை செய்து வந்துள்ளார். மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டுமுறை சொந்த ஊருக்கு வந்த மனைவி, பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வார்.

ADVERTISEMENT


ஊரில் உள்ள ரமேஷ் நண்பர்கள் சிலர், உன் மனைவியின் நடத்தை சரியில்லை என புகார் கூறியுள்ளனர். இதனை நம்பி கடந்த 3ந்தேதி ஊருக்கு வந்த ரமேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்படியெல்லாம் எதுவும்மில்லை எனச்சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதோடு, வேலைக்கு எதுக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் – மனைவி இருவருக்கும் சண்டை வந்துள்ளது.


நீ யாரையோ வச்சிக்கிட்டு எனக்கு துரோகம் செய்யற என கணவன் – மனைவி இருவருக்கும் பிப்ரவரி 8ந்தேதி விடியற்காலை சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வந்தவர் பெரம்பலூர் டூ நகரி இடையே செல்லும் உயர்மின் கோபுரம் அந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. மின் இணைப்பு தரப்படாத 300 அடி உயரம்முள்ள அந்த கோபுரத்தின் உச்சிக்கு ஏறினார்.


இதனைப்பார்த்து ஏரிக்கரை ஓரம் இருந்த அவ்வூரை சேர்ந்தவர்கள் எதுக்குடா, ஏர்ற ஏறாதடா எனச்சொல்லியுள்ளனர். அதனையும் மீறி கோபுரத்துக்கு ஏறி, என் மனைவி என்னை மதிக்கல, அதனால் கீழே விழுந்து சாகப்போறேன் என்றுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியானவர்கள் உடனடியாக ரமேஷ் மனைவிக்கு தகவல் கூறினர். அதே நேரத்தில் போலிஸ், வருவாய்த்துறைக்கு தகவல்சொல்ல அவர்களும் சம்பவயிடத்துக்கு வந்தனர்.


அவர்கள் ரமேஷ் வைத்திருந்த செல்போன்க்கு தொடர்பு கொண்டபோது, அவர் எடுத்து பேசியபோது, கள்ளத்தொடர்பு வைத்துள்ள என் மனைவியால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்துக்கொள்ள போகிறேன் என்றார். அவரிடம் செல்போன் வழியாக கலெக்டர் கந்தசாமி, எஸ்.பி சிபிசக்கரவர்த்தி, டி.எஸ்.பி செந்தில், மனைவி, பிள்ளைகள் என பலரும் 3 மணி நேரமாக பேசினர்.


அவரது மனைவியோ ஓவென கதறி அழுதார். தற்கொலை செய்துக்கொள்ள கீழே குதித்தால் பாதுகாப்பாக தாங்கி பிடிக்க வேண்டுமென டவரை சுற்றி வலையை பிரித்தனர். காலை 11.30 மணியளவில் யார் சமாதானத்தையும், நம்பிக்கை வார்த்தைகளை கேட்காமால் டவர் மேலிருந்து கீழே குதித்தார். 200 அடியில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு கம்பியில் தலை மோதியதோடு உடல் சிக்கி அந்தரத்தில் தொங்கியது. மோதிய வேகத்தில் இறந்த ரமேஷ் உடலை ஆரணி தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேதபரிசோதனைக்கு பின் ஒப்படைக்கப்பட்டது.


கள்ளக்காதலில் ஈடுப்பட்ட மனைவிக்கு தண்டனை தர அவர் கத்தி கதறி அழுதும் கேட்காமல் கீழே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் ரமேஷ். மனைவி, பிள்ளைகள் கண் முன் இந்த கோரம் நடந்துள்ளது. இதனை காலம் முழுக்க அவரது மனைவி மறக்க முடியாது, இது அந்த பிள்ளைகளின் மனதில் ஆழப்பதிந்துவிடும். இது அவர்களை தங்களது தாயை குற்றவாளியாக நோக்கும் பார்வை மரண தண்டனையை விட கொடுமையானதாக இருக்கும் என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT