ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமனார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் மேற்கு ஊராட்சியில் 5வது வார்டு உறுப்பினர் பதவிக்காக அதேப் பகுதியை சேர்ந்த மோகன் மனைவி மல்லிகா (40) போட்டியிட்டார்.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வேட்பாளர் மல்லிகாவுக்கு தீடிரென வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments