Candidate who collected votes by crying!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், தேர்தலில் தோல்வி அடைந்தால், உயிரோடு இருக்கமாட்டேன் என கதறி அழுது வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி 1வது அ.தி.மு.க. வேட்பாளராக விஜயன் போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள செங்குளம் பகுதியில் குடும்பத்தோடு விஜயன் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது, தன்னை கட்சி கை விட்டு விட்டதாகவும், மக்களை நம்பித்தான் நான் போட்டியிடுவதாகவும், தெரிவித்துள்ளார். நான் தோற்கும் பட்சத்தில் உயிரோடு இருக்க மாட்டேன் என்றும், அப்படி நான் இறந்து போனால் முதல் மாலையை ஊர் தான் எனக்கு அணிவிக்க வேண்டும் என்று கதறி அழுத்துக் கொண்டே பேசினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.