ADVERTISEMENT
ADVERTISEMENT
கருப்பு அங்கி அணிந்து வழக்கறிஞர்கள் போராட்டங்களில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், பார் கவுன்சில் வகுத்துள்ள விதிகளின்படி அனைத்து வழக்கறிஞர்களும் பணியின் போது ஆடைக்கட்டுப்பாட்டைப் பின்பற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று (23/12/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருப்பு அங்கி, கழுத்துப்பட்டை அணிந்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபட இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
ADVERTISEMENT
Show comments