ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதை, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்து வருபவர், டாக்டர் குவைத்ராஜா.
கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினைத் தொடர்ந்து, ராஜபாளையத்தை அடுத்துள்ள மொட்டமலை அகதிகள் முகாம் மற்றும் நரிக்குறவர் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, சுரன் நர்சிங் கல்லூரி மற்றும் குவைத்ராஜா மக்கள் இயக்கம் சார்பில், அரிசி, காய்கறிகள், மளிகை, பால் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ADVERTISEMENT
கொடைவள்ளல் என்று அழைக்கப்படும் டாக்டர் குவைத்ராஜாவுக்கு இன்று (ஏப்ரல் 24) பிறந்தநாள் என்பதால், தனது கையால் அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகிழ்ந்தார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments