ADVERTISEMENT

பாம்பு கடித்ததால் சிகிச்சைக்கு வந்த பெண், பாம்போடு வந்தும் பயனில்லை... அரசு மருத்துவமனை அவலம்!!!

06:15 PM Jun 25, 2019 | kamalkumar

கும்பகோணம் தலைமை மருத்துவமனை சமீப காலமாக தரம் தாழ்ந்துவருகிறது. சிகிச்சைக்காக வரும் மக்களை அலைகழிப்பதும், அவசர சிகிச்சைக்கு வருபவர்களை அப்புறப்படுத்துவதையுமே தொடர்கதையாக மாறிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



நல்ல பாம்பு கடித்த பெண்ணையும், கடித்த பாம்பை வெட்டி எடுத்துவந்து காட்டியும் சிகிச்சை அளிக்காமல் எலி கடித்துள்ளது என கூறியபடியே செல்போன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் டாக்டர் ஒருவர். அந்த பெண்ணின் வாயில் நுறைதள்ளுவதை கண்டதும் தப்பித்துக்கொள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார் அந்த டாக்டர்.

என்ன நடந்தது என விசாரித்தோம்... தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த மணஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (விவசாயி). இவரது மகள் ஜோதிகா(17). மதியநேரத்தில் வீட்டில் இருந்த ஜோதிகாவின் வலது கால் சுண்டு விரலில் நல்ல பாம்பு கடித்தது. இதையடுத்து ஜோதிகா சத்தம் போட்டிருக்கிறார்.

அப்போது அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஜோதிகாவை கடித்த பாம்பை மண்வெட்டியால் மூன்று துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த ஜோதிகாவையும் மீட்டு அருகில் இருந்த கும்பகோணம் தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டரோ ஜோதிகாவை எலி கடித்துள்ளது என கூறியடியே செல்போனிலும், அருகில் இருந்த நர்சுகளிடமும் பேசியபடியே இருந்திருக்கிறார். கோபமான உறவினர்கள் ஜோதிகாவை கடித்த பாம்பை கொண்டு வந்துள்ளோம் எனக் கூறியும் சிகிச்சை அளிக்காமல் எலி கடிச்சிருக்குன்னு சொல்றது நியாயமா டாக்டர் என கேட்டுள்ளனர்.

ஆனாலும் டாக்டர் அதை சட்டை செய்துக்கொள்ளவில்லை, மீண்டும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். மதியம் மூன்று மணிக்கு வந்த நோயாளிக்கு, மாலை 6 மணி வரை சிகிச்சை அளிக்காமல் இருந்ததால் ஜோதிகாவின் வாயில் நுரை தள்ளியது. இதைப்பார்த்த டாக்டர் இங்கு சிகிச்சை அளிக்க முடியாது உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள் என கராராக கூறி விரட்டியிருக்கிறார்.

வேறு வழியில்லாமல் அருகில், அம்பாசத்திரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் ஜோதிகாவை அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உறவினர்கள் கூறுகையில், "எங்க பொண்ணுக்கு ஏதாவது ஆகிடுச்சின்னா அந்த டாக்டர சும்மா விடமாட்டோம் எல்லாத்துக்கும் வீடியோ வச்சிருக்கோம், ஊரை திரட்டிவந்து மருத்துவமனையை முற்றுகையிடுவோம்". என்கிறார்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT