Skip to main content

தனிமாவட்ட விவகாரத்தால் பற்றி எரியும் மயிலாடுதுறை, கும்பகோணம்!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக  அறிவிக்க வேண்டும் என கும்பகோணத்திலும், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மயிலாடுதுறையிலும், போராட்டங்கள் நடந்துவருகிறது.

k

 

கடந்த 18 ம் தேதி  நடந்த சட்டமன்ற கூட்டத்தில் நெல்லையை பிரித்து தென்காசியையும், காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டையும் புதிய மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி. அதனை தொடர்ந்து பேசிய வருவாய்துறை அமைச்சர் உதயக்குமாரோ, கும்பகோணம் மக்களின் வேண்டுகோளுக்கினங்க விரைவில் கும்பகோணத்தை தனிமாவட்டமாக அறிவிக்கப்படும் என கூறினார். இது குடந்தை மக்களே மக்களை மகிழ்வித்தாலும், மயிலாடுதுறை மக்களை போராட்டத்திற்கு தள்ளியது.

 

இந்தநிலையில் கும்பகோணத்தை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு பாமகவின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசியவர்கள், "  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டத்தை ஏற்படுத்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தும், இனியும் காலதாமதம் படுத்துவதில் நியாயமில்லை. உடனே புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவை கூட்டத் தொடரில் புதிய மாவட்டங்களாக செங்கல்பட்டு, தென்காசி அறிவிக்கப்பட்டதை போல கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உடனடியாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்."  என வலியுறுத்தியே பேசினர்.

 

k

 

இது ஒருபுறம் இருக்க நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மூன்று நிட்களாக கடைகளை அடைத்து போராட்டம் நடத்திவருகின்றனர். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 மூன்று நாட்களாக நடந்த கடையடைப்பு போராட்டத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகமும், பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தனி மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட வில்லை என்றால் தொடர்ந்து கடையடைப்பு போராட்டத்தை நடத்துவோம், என கூறி மனித சங்கிலி போராட்டத்தையும் நடத்தியிருக்கின்றனர்.

 

கும்பகோணம், மயிலாடுதுறை ஆகிய இரண்டு கோட்டங்களிலும் தனி மாவட்ட விவகாரம் தீயாக பற்றிவருகிறது, தென்காசியையும், செங்கல்பட்டையும் அறிவித்தவர்கள், குடந்தையை மாவட்டமாக்க உள்ளோம் என்கிற செய்தியை தவிர்த்திருக்கலாம்,இது மக்களுக்கும், அரசுக்கும் நன்மையாக இருந்திருக்கும்."என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.