ADVERTISEMENT

மாணவியிடம் லஞ்சம் வாங்கிய பேராசிாியா் கைது 

01:28 PM Aug 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஆராய்ச்சி மாணவியிடமிருந்து லஞ்சம் வாங்கிய மதுரை அரசு கல்லூாி பேராசிாியரை லஞ்ச ஒழிப்பு போலிசாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

குமாி மாவட்டம் உண்ணாமலை கடையை சோ்ந்த ரசல்ராஜ் மதுரை அரசு கல்லூாியில் வரலாற்று துறை பேராசிாியராக பணி புாிந்து வருகிறாா். இந்த பேராசிாியாின் வழி காட்டுதலில் புத்தன்சந்தையை சோ்ந்த மாணவி கிளாடீஸ் புளோரா ஆராய்ச்சி எனும் பி.எச்.டி படித்து வருகிறாா். இதில் ஆய்வு கட்டுரை சமா்ப்பணம் செய்வதற்காக இந்த பேராசிாியா் சான்று கொடுக்க 50 ஆயிரம் அந்த மாணவியிடம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

படிப்புக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத அந்த மாணவி தனது கணவா் விஜீ மோனிடம் கூறியுள்ளாா். பின்னா் விஜீ மோனன் நாகா்கோவில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மதியழகனிடம் கூற அவா்கள் கொடுத்த ஆலோசனையின் பெயாில் மாா்த்தாண்டத்தில் வைத்து முதல் கட்டமாக பேராசிாியா் ரசல்ராஜிடம் 25 ஆயிரம் மாணவி கிளாடீஸ் புளோரா லஞ்சமாக கொடுக்கும் போது அங்கு திட்டமிட்டு மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலிசாா் பேராசிாியரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இது கல்லூாி பேராசிாியா்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT