ADVERTISEMENT

வீட்டுக்கே வரும் கோவில்பட்டி கடலை மிட்டாய்... அஞ்சல்துறையின் அசத்தல் அறிவிப்பு!

08:05 PM Jun 03, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலைமிட்டாயை வீடுகளுக்கே டெலிவரி செய்யும் புதிய அறிவிப்பை இந்திய அஞ்சல்துறை வெளியிட்டுள்ளது.

புவிசார் குறியீடு பெற்ற தூத்துக்குடி கோவில்பட்டி கடலைமிட்டாயின் பெருமையை உலக அளவில் கொண்டு செல்ல இந்திய அஞ்சல்துறை கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன் தொடர்ச்சியாகக் கோவில்பட்டி கடலைமிட்டாய் விற்பனையையும் அஞ்சல் துறையை நடத்த இருப்பதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ளார். 390 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ கோவில்பட்டி கடலைமிட்டாயை இந்தியாவின் எந்த அஞ்சல் நிலையத்திலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஒரு நாட்களில் வீட்டுக்கு வந்துவடும். கோவில்பட்டி கடலைமிட்டாய் விரைவு அஞ்சல் மூலம் சேர்க்கப்படும் அதற்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT