கோவை ரயில் நிலையம் அருகே உள்ள காவலர் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ADVERTISEMENT
ADVERTISEMENT
1918ம் ஆண்டு கேம்பிள்டன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் தொடங்கப்பட்டது இந்த கிளப் இந்த கிளப்பை அருங்காட்சியகமாக மாற்ற காவல்துறை சார்பில் பணிகள் நடைபெற்றன. தற்போது 60 இலட்சம் ரூபாய் செலவில் இந்த கிளப் அருங்காட்சியகமாக புணரமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட துறை சார்ந்த பல பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது கார்கில் போரின்போது பயன்படுத்தப்பட்ட பீரங்கி, விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கி கப்பல், வீரப்பனிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்ட பல பொருட்கள்.
இதில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
ADVERTISEMENT
Show comments