ADVERTISEMENT

ஓபிஎஸ் மாநாட்டிற்குள் கத்தியுடன் புகுந்த நபர்; போலீசார் விசாரணை  

11:45 AM Apr 25, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும், தனது பலத்தை நிரூபிக்கவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் கூட்டம் கூடியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்பொழுது கூட்டத்தில் ஒரு நபர் கத்தியுடன் இருப்பதை கண்ட சிலர் போலீசாரிடம் அதை தெரிவித்தனர். அதன்பின் அந்த நபர் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்த போலீசார் அவர் வைத்திருந்த கத்தியைக் கைப்பற்றினர். பின்னர் மேடையின் பின்புறத்திற்கு அந்த நபரை அழைத்து சென்ற போலீசார் அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். தகவலறிந்து தொண்டர்கள் சிலர் மேடையின் பின்புறம் குவியத் தொடங்கினர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அந்த நபரின் பெயர் கருத்தப்பாண்டி என தெரியவந்துள்ளது. எதற்காக அவர் ஓபிஎஸ் மாநாட்டிற்கு கத்தியுடன் வந்தார் என்பது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT