ADVERTISEMENT

கட்சிக்கொடி கம்பம் நடும் விவகாரத்தில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு

12:58 PM May 02, 2018 | Anonymous (not verified)

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கட்சி கொடி நடும் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குத்தி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருப்பத்தூரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கலைஞர் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை வைத்தார். இதனால் அவருக்கும் அதே பகுதியில் உள்ள திமுகவை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கட்சி கொடி நடுவதில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சதீஷ் அரவிந்தனை சராமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இரத்த வெள்ளத்தில் கிடந்த அரவிந்தனை மீட்ட அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். இதனால் கோபம் அடைந்த அரவிந்தன் உறவினர்கள் சதீஷின் இறைச்சி கடையை தீ வைத்து கொளுத்தினர். பின்னர் திருவண்ணாமலை சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரவிந்தன் கொலை குறித்து சதீஷின் சகோதரர் அன்புவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT