Skip to main content

ஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

ஆத்தூர் அருகே, தனது மூன்றாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் அகரம்புதூரைச் சேர்ந்தவர் சிங்காரம் (60). கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி திருமணமான ஓரிரு மாதத்திலேயே சிங்காரத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் இரண்டாவதாக பெரியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். பெரியம்மாளும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 

Murder of 3rd wife by Husband near Aathur

 

இதையடுத்து மூன்றாவதாக அகரம்புதூரைச் சேர்ந்த சுமதி (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தங்கம் (21), வேலு (19), சக்தி (13) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

 

 

சொந்த ஊரில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சிங்காரம், ஆத்தூர் கொட்டாம்பாடியில் உள்ள மோகனசுந்தரம் என்பவரின் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதே பண்ணைக்குச் சொந்தமான நிலத்திலேயே குடிசை வீடு கட்டி குடியேறினார். 

 

 

இந்நிலையில் சுமதிக்கு, அங்கு பண்ணைக்கு வேலைக்கு வரும் ஆண்கள் சிலருடன் தவறான தொடர்பு இருப்பதாக சிங்காரம் சந்தேகப்பட்டார். அது தொடர்பாக அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். 

 

Murder of 3rd wife by Husband near Aathur

 

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22, 2019) அதிகாலை 5 மணியளவில், கணவன், மனைவி இருவரும் பசுமாடுகளிடம் பால் கறப்பதற்காக குவளைகளுடன் கொட்டகைக்கு வந்துள்ளனர். அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

 

ஆத்திரம் அடைந்த சிங்காரம், கீழே கிடந்த மண்வெட்டியின் மர கைப்பிடியை எடுத்து சுமதியின் தலையில் 

 

பலமாக தாக்கினார். அடுத்தடுத்து தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இந்த தாக்குதலில் சுமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவியை கொன்றுவிட்டு சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

 

வீட்டில் இருந்து எழுந்து வந்த மூன்று பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் தாயைப் பார்த்து அலறித்துடித்தனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், தலைவாசல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

 

 

டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவம் இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தை, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான சிங்காரத்தை தேடி வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.