ADVERTISEMENT
நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஐபிஎல் போட்டியின்போது நடந்த போராட்டத்தில் இருவரை தாக்கியது, நெல்லை புளியங்குடியில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி நெல்லை காவல்துறையினர் கருணாஸை கைதுசெய்ய சென்னை வந்தனர். இந்நிலையில் தற்போது கருணாஸூக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டுள்ளனர். கருணாஸின் உடல்நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்ட காவல்துறையினர் அவருக்கு ஜாமீன் வழங்கினர்.
ADVERTISEMENT
Show comments