கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சோ்ந்த மரியசுரேஷ் கடந்த 9- ஆம் தேதி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமியாரை பார்ப்பதற்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனையைச் சோ்ந்த காவலாளிகள் இரண்டு பேர் நோயாளிகளை பார்க்கும் நேரம் முடிந்து விட்டது என கூறி அவரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் கிறிஸ்தவ பாதிரியர் ஜார்ஜ் பென்னையா தலைமையில் மரியசுரேஷ் தாக்கப்பட்ட தக்கலை அரசு மருத்துவமனையில் குவிந்து காவலாளிகள் இரண்டு பேரையும் கைது செய்ய கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Show comments