Skip to main content

''என் மகளை ஒருமுறை தொட்டுப்பாக்கணும்'' கதறிய தாயால் கண்ணீா் வடித்த பெருங்கூட்டம்!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

கேரளா கொல்லம் பள்ளிமண் இடையூா் பகுதியை சோ்ந்த பிரதீப்- தன்யா தம்பதியினாின் 6 வயது மகள் தேவநந்தா 26-ம் தேதி வீட்டு முன் விளையாடி கொண்டியிருந்த போது திடீரென்று காணவில்லை உடனே அந்த சிறுமியை கண்டுபிடிக்க வேண்டும். கேரளாவில் அடிக்கடி இதே போன்று சம்பவங்கள் நடக்கிறது அதை தடுக்க வேண்டும் என்று மலையாள நடிகைகள் சங்கம் முதல்வா் பினராய் விஜயனுக்கும் டிஜிபி லோக்நாத்பெக்ராவுக்கும் கோாிக்கை வைத்தனா்.

 

kanyakumari


இந்த நிலையில் கேரளா முமுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சிறுமி மாயமான விவகாரத்தை தீவிரமாக கையில் எடுத்த போலீசாா் சிறுமியை பாலியியல் துன்புறுத்தலுக்காக கடத்தி செல்லபட்டாரா? என்ற கோணத்தில் போலீசாா் பலரை பிடித்து விசாாித்தனா். இந்தநிலையில் 28-ம் தேதி சிறுமியின் வீட்டு பின்னால் ஒடும் ஆற்றில் இருந்து சிறுமியை காயத்துடன் சடலமாக மீட்ட தீயணைப்புபடை வீரா்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு கொண்டு சென்றனா். மேலும் சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அந்த கோணத்தில் போலீசாா் விசாரணையை முடுக்கியுள்ளனா்.

ஸ்ரீ சரஸ்வதி வித்யாலவில் 1- ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி பாலியியல் ரீதியில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆற்றில் விழுந்து இறந்தாரா?என்ற கேள்வி பலதரப்பினாிடம் எழுந்தியிருக்கும் நிலையில் சிறுமியின் உடலை பாா்த்து அவாின் பெற்றோா்கள் கதறி அழுதனா். கண்ணாடி பெட்டிக்குள் இருந்த மகளின் உடலை பாா்த்த தாய் தன்யா பெட்டியை திறங்கள் என் மகளை தொட்டு பாா்க்கணும்னு சொல்லி கதறியது அங்கு கூடியிருந்த ஆயிரகணக்கானோாின் கண்களில் ஓரே நேரத்தில் கண்ணீரை வடிய வைத்தது.

அந்த சிறுமியுடன் படித்த சக பிஞ்சு மாணவா்களும் அழுதது சோகத்தை முட்ட வைத்தது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.