ADVERTISEMENT

நேர்காணலில் கனிமொழி..

02:29 PM Mar 10, 2019 | santhoshkumar


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவர்களிடம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது.

ADVERTISEMENT

மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேற்று நேர்காணல் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில், மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்றது. மக்களவை தொகுதியான தூத்துகுடியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்திருந்தார். அவரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோர் நேர்காணல் செய்தனர். அதேபோல ஜெகத்ரட்சகன், நேர்காணலில் கலந்துகொண்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT