ADVERTISEMENT
'மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மருத்துவ கல்லூரி கட்டும்போதே இடிந்து விழுந்து இருக்கிறது என குற்றம் சாட்டியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், மக்கள் வரிப்பணம் 366 கோடி உருமாறும் கோலம் இது என விமர்சனம் செய்துள்ளார். அதேபோல், தேர்தலுக்குள் கட்டிமுடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அவலத்திற்கு காரணம். உயிர்காக்கும் மருத்துவமனை உருவாகும்போதே உடைந்து போகிறது. நினைவிருக்கட்டும் நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். மக்கள் நீதி மலர தக்க தருணம் இதுவே எனவும் கட்டமாக தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments