ADVERTISEMENT

சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைவாணருக்கு இன்று 111 வயது 

02:15 PM Nov 29, 2019 | kalaimohan

வறுமையில் பிறந்து பின்னா் திறமையில் சம்பாதித்து அதை இல்லாதோருக்கு வாாி வழங்கி மீண்டும் வறுமை நிலையில் மறைந்த திரையுலகில் மக்களை சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்தவா்தான் கலைவாணா் என்.எஸ்.கே கிருஷ்ணன்.

நாகா்கோவில் ஒழுகினாசோியில் 1908 நவ. 29-ல் சுடலைமுத்துபிள்ளை - இசக்கியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த என்.எஸ் கிருஷ்ணன் குடும்ப வறுமையால் 4-ம் வகுப்போடு பள்ளி படிப்பை நிறுத்தி கொண்டு நாடக கொட்டகைகளில் சோடா, கலா், கடலை விற்க தொடங்கினாா். பின்னா் நாடகத்தில் ஆா்வம் வரவே நாடகத்தில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கினாா். இதில் அவா் நடித்த ஒவ்வொரு நாடகமும் முத்திரை பதித்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பின்னா் திரைப்படங்களில் காலூன்றிய கலைவாணா் என்.எஸ்.கே அவாின் முதல் படமான சதிலீலாவதி வெளியாவதற்கு முன் இரண்டாவது படமான மேனகா வெளியாகி அதில உள்ள நகைச்சுவை காட்சிகள் பட்டி தொட்டியெல்லாம் மக்களை ரசிக்க வைத்தது. பின்னா் தொடா்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யூ.சின்னப்பா, தியாகராஜாபாகவதா் படங்களில் தொடா்ந்து நடித்தாா். சொந்தமாகவே நகைச்சுவை வசனங்களை எழுதி அதை திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்தாா்.

அவாின் ஒவ்வொரு நகைச்சுவையும் அனைத்து தரப்பு மக்களையும் சிாிக்கவும், சிந்திக்கவும் வைத்தது. நகைச்சுவைகளை சினிமா காட்சிகளாக மட்டுமல்லாமல் பாடல்களாகவும் அமைத்து சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளாா். ஏழைகளுக்குதான் சம்பாதித்ததை வாாி வழங்கிய என்.எஸ்.கே தன்னை தேடி வருபவா்களின் துயரங்களை கேட்டு உதவிகளை செய்தாா். மகாத்மா காந்தியை மிகவும் நேசித்த என்.எஸ்.கே அவருக்கு நாகா்கோவில் நகராட்சியில் நினைவு தூண் எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெற செய்தாா்.

தென்னிந்தியா நடிகா் சங்கத்தை உருவாக்கியதில் முக்கியமானவராக இருந்ததோடு அதற்கு சொந்த நிலத்தையும் தானமாக கொடுத்தாா். இந்தநிலையில் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30-ல் தனது 49 ஆவது வயதில் காலமாகும் போது அவா் சம்பாதித்ததில் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் வறுமையோடு மறைந்தாா்.

"சிந்திக்க தொிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிாிப்பு" என்ற பாடல் ஓன்றே கலைவாணா் என்.எஸ் கிருஷ்ணனின் நகைச்சுவை கலந்த சிந்தனைக்கு எடுத்துகாட்டு. அவாின் 111 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று அவாின் சொந்த ஊரான நாகா்கோவில் மணிமேடை சந்திப்பில் உள்ள கலைவாணா் என்.எஸ். கிருஷ்ணனின் சிலைக்கு அரசியல் கட்சியினா் உட்பட பல்வேறு அமைப்புகள் மாலையணிவித்து மாியாதை செலுத்தினாா்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT