ADVERTISEMENT

கஜா புயல் வேகம் இரட்டிப்பாக அதிகரிப்பு!!!

09:02 AM Nov 15, 2018 | kamalkumar


ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று மாலை, அல்லது இரவு கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக அதிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்.

ADVERTISEMENT

சென்னை மற்றும் நாகைக்கு 370 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்னும் 6 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறவும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது 14 கி.மீ. வேகமாக அதிகரித்துள்ளது. கரையைக் கடக்கும்போது புயலின் வேகம் 80 முதல் 100 கி.மீ. வரை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT