ADVERTISEMENT

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் தரப்பு வழக்குத்தொடர்ந்தது!!!

04:43 PM Jan 23, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதல்வர் பழனிசாமி தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. கொடநாடு வீடியோ விவகாரத்தில் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தவறான தகவல் வெளியிடுவதாக கூறி மானநஷ்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி தரப்பு. ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டிருப்பதும், இனி தன்னைப்பற்றி அவதூறு பரப்ப தடைவிதிக்க கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதும், இதை அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கக்கோரியதும் குறிப்பிடத்தக்கது. வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி கல்யாண சுந்தரம் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபின்பு கொடநாடு எஸ்டேட்டிலுள்ள அவரது வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போனது. மற்றும் அதைத்தொடர்ந்து சில கொலைகளும் நடந்தன. இந்த சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். என வீடியோ வெளியிட்டிருந்தார், தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், நாரதா பத்திரிகையின் ஆசிரியருமான மேத்யூ சாமுவேல்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT