ADVERTISEMENT

ஜெ. தனிப்பாதுகாப்பு அதிகாரி ஆணையத்தில் ஆஜர்; சிசிடிவியை அணைத்தது யார்?

12:28 PM Dec 20, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி விசாரணை செய்து வருகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று ஜெ.வின் தனிப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி ஆஜரானார்.

ஏற்கனவே பெருமாள்சாமி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் பெருமாள்சாமி தற்போது எடப்பாடியின் தனி பாதுக்காப்பு அதிகாரியாகவும் இருப்பதால் ஆஜராக முடியாத நிலையில் தற்போது இன்று ஆஜராகி உள்ளார். அதேபோல் ஜெ.வின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த சுதாகரும் இன்று ஆஜரானார்.

இன்று இவர்களிடம் ஜெ. கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் எந்த மாதிரியான மருந்துகள் எடுத்துக்கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட போது போயஸ் இல்லத்தில் முதலமைச்சருக்கான ஆம்புலன்ஸ் இருந்ததா?. இருந்தது என்றால் ஏன் அந்த ஆம்புலன்ஸில் அவரை கூட்டிசெல்லவில்லை. அதேபோல் சிசிடிவி கேமராக்களை அணைக்க யார் உத்தரவிட்டது போன்ற கேள்விகளை ஆணையம் முன் வைக்கும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT