ADVERTISEMENT

விண்ணைத்தொட்ட மல்லிகை பூ விலை!

09:27 AM Dec 12, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தொடர் மழை காரணமாகவும், மலர் வரத்துக் குறைவு காரணமாகவும் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தற்போது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத அளவிற்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாட்டுத்தாவணி மலர் சந்தையில் கனகாம்பரம் பூ கிலோ ஒன்றுக்கு 2,000 ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ ஒன்றுக்கு 1,500 ரூபாய்க்கும், பிச்சி பூ -1200 ரூபாய்க்கு, அரளி பூ- 400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் -300 ரூபாய்க்கும், சம்பங்கி, செவ்வந்திப் பூக்கள் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அண்மையில் வரத்துக் குறைவு காரணமாக தக்காளி விலை உச்சத்தை எட்டி இருந்த நிலையில், தற்போது மல்லிகை கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உச்சத்தை அடைந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT