ADVERTISEMENT
ADVERTISEMENT
நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் 988 காளைகள் மற்றும் 846 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலையில் காளையர்கள் மற்றும் விழா கமிட்டியினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 1700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியானது காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது.
Show comments