ADVERTISEMENT

பார்டர் பரோட்டா கடையில் வருமானவரி சோதனை!

05:42 PM Feb 21, 2018 | Anonymous (not verified)


செங்கோட்டை பிரானுர் பார்டரில் உள்ள ரஹ்மத் பரோட்டா கடையில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் தமிழக - கேரளா எல்லையான பிரானூர் பார்டர், பகுதியில் உள்ள ரஹமத் பரோட்டா கடை மிகவும் பிரபலமானது. சீசன் காலத்தில் குற்றாலத்திற்கு வரும் மக்கள் அனைவரும் தவறாமல் செங்கோட்டை பார்டர் பரோட்டா கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு தான் செல்வார்கள். எப்போது சென்றாலும் வரிசையில் நின்று தான் சாப்பிட வேண்டும். அந்த அளவிற்கு பார்டர் ரஹ்மத் பரோட்டா கடை ரூசியில் நம்பிக்கையான பெயர் பெற்றது.

இந்தநிலையில் இன்று மாலை, திடீரென பிரானுர் பார்டரில் உள்ள ரஹ்மத் பரோட்டா கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரஹ்மத் பரோட்டா கடை உரிமையாளரின் வீட்டிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT