ADVERTISEMENT
இதனையடுத்து எதிர் முனையில் பேசியவர் ஸ்ரீதரனின் ஏடிஎம் கார்டு விவரங்களை கேட்டுள்ளார். அதனை நம்பி ஸ்ரீதரனும் தனது ஏடிஎம் கார்டு விவரங்களை கூறி உள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன் ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT
மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் இருந்த எண்ணை ரயில்வே நிர்வாகம் பதிவிடவில்லை எனவும் தெரியவந்துள்ளது. எனவே ஐஆர்சிடிசி இணையதளம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என வடபழனி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Show comments