ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவன் போலீஸில் சரண் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வீலெர் தொகுதிக்கு உட்பட்ட கலக்கடாவை சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி அம்மாஜியின் நடத்தை குறித்து உசேனுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
ADVERTISEMENT
இந்நிலையில் கதிராயசேர்வு சென்று கொண்டிருந்த அம்மாஜியின் கழுத்தை உசேன் அறுத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்துள்ளார் உசேன். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து வெட்டப்பட்ட தலையுடன் கணவன் போலீசில் சரணடைந்த சம்வபம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து வெட்டப்பட்ட தலையுடன் கணவன் போலீசில் சரணடைந்த சம்வபம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Show comments