ADVERTISEMENT

அமைச்சரிடம் ஆதரவு தெரிவித்து பின் அதிமுகவுக்கு வாக்களித்த சுயேட்சைகள்! 

03:10 PM Mar 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில், திமுக கூட்டணி 11 இடங்களையும், அதிமுக 11 இடங்களையும் வென்றன. மேலும், திமுகவில் வாய்ப்பு கிடைக்காத 5 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றனர். அதனைத் தொடர்ந்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். அதனால், தி.மு.க. தரப்பு பெரும்பான்மையை பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பா.சுதா என்பவர் 15 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட மைக்கேல்ராஜ் 12 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT