ADVERTISEMENT

பிரபல நகைக்கடைகளில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து 10 மணி நேரம் சோதனை!

07:58 AM Feb 22, 2020 | Anonymous (not verified)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சி பகுதி உள்ளது. இங்குள்ள பாலாஜி, விக்னேஷ், எஸ்.ஆர்.பி என்கிற பிரபலமான 3 நகைகடைகளில் சென்னையில் இருந்து சுமார் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் வந்து சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

காலையில் தொடங்கிய சோதனை தற்போதும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுப்பற்றிய முழு தகவல் இன்னும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT