Skip to main content

திருப்பத்தூர் அருகே போலி மருத்துவர் கைது!

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

திருப்பத்தூர் மாவட்டம், பெரியகண்ணாலப்பட்டி கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவர் எனச்சொல்லிக்கொண்டு மருத்துவம் பார்த்து வருவதாகவும், ஊசிப்போடுவது, மருந்து மாத்திரை தருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அவர் அந்த தகவலை திருப்பத்தூர் வட்டாச்சியருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் நேரடியாக அக்கிராமத்துக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.

tiruppattur district fake doctor arrest police tahsildar

அப்போது மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த 48 வயதான ரவிச்சந்திரன் என்பவரை கையும் களவுமாக பிடித்தார். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கில் ஊசி, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் போன்றவை இருந்தன. அவரிடம் மருத்துவ சான்றிதழ் எதுவும்மில்லை என்பதை உறுதி செய்தனர். 
 

அதன்பின்னர் மாவட்ட, ஒன்றிய மருத்துவ அலுவலர்களுக்கு தகவல் தந்தார் தாசில்தார். அவர்கள் வந்ததும் போலி மருத்துவரை மருத்துவ அலுவலர்களிடம் ஒப்படைத்தார்.  அவர்கள் மருந்துகளை பறிமுதல் செய்தனர். பின்னர், மருத்துவ அலுவலர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கந்திலி  போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.