ADVERTISEMENT

இருசக்கர வாகனம் கழுவுவதில் ஏற்பட்ட மோதலில் கொலை... 10 பேருக்கு போலீஸ் வலை!

08:56 AM Oct 18, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தைக் கழுவுவதில் ஏற்பட்ட தகராறில் நடந்த கொலை தொடர்பாக 10 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ராஜகோபால் நகரைச் சேர்ந்த சுப்பையா, ஆவுடையப்பன் ஆகியோருக்கிடையே வீட்டின் முன் இருசக்கர வாகனம் கழுவுவது தொடர்பாக அடிக்கடி சண்டை நடந்துவந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விரோதத்தில் சுப்பையா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஆவுடையப்பனை வீட்டின் அருகே இருந்த மாட்டுத்தொழுவத்தில் வைத்துத் தாக்கி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ரத்தவெள்ளத்தில் ஆவுடையப்பன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் பெருமாள் காயமுற்றார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிப்காட் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவுசெய்து சுப்பையா உள்ளிட்ட 10 பேரைத் தேடிவருகின்றனர். இருசக்கர வாகனம் கழுவுவதில் ஏற்பட்ட மோதல், கொலையில் முடிந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT