ADVERTISEMENT

6 கோடி கேட்டு திருச்சியில் தொழிலதிபரின் பேரன் கடத்தல்... 4 பேர் கைது!

10:02 PM Oct 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

திருச்சியில் தொழிலதிபர் ஒருவரின் பேரன் பணம் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கன்டோன்மென்ட் வார்னர்ஸ் சாலையில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் 4 பேரால் கடத்தப்பட்ட புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 கோடி ரூபாய் கேட்டு தொழிலதிபரின் பேரனை கடத்திய புகாரில் சரவணன், மணிகண்டபாண்டியன், சதீஷ், செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவை கொண்டு கார் சென்ற இடத்தை கண்டறிந்து 4 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT