Skip to main content

நகைகொள்ளை வழக்கில் போலீஸ் பிஸி;கடத்தல் ஆசாமி ஜாலி உலா!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.சாலையில் உள்ளவர் சோமசுந்தரம் என்கிற வணக்கம் சோமு. இவர் முன்னாள் மலைக்கோட்டை பகுதியின் அதிமுக பொருளாளர் . இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறர்.

இந்த நிலையில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வரும் மகாலட்சுமி என்பவரை ஒருதலையாக காதலித்துள்ளார் திருமணத்திற்கு அவர் மறுக்கவே அவரை கட்டாயமாக கடத்தி திருமணம் செய்ய வணக்கம் சோமு முடிவெடுத்து இதற்காக கடந்த 30 ஆம் தேதி தோழி ஹேமாவுடன் பேராசிரியை மகாலட்சுமி நடந்து சென்ற போது சோமு தனது கார் டிரைவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆம்புலன்ஸ் வேனில் பேராசிரியரை கடத்தினார் .

 

police


திருச்சி மதுரை சாலையில் உள்ள துவரங்குறிச்சி அருகே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மகாலட்சுமியை இறக்கிவிட்டு வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர்கள் தப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் நாஞ்சிக்கோட்டை சார்ந்த அலெக்ஸ் மற்றும் தஞ்சையைச் சார்ந்த மரிய பிரகாஷ் மற்றும் கார் டிரைவர் கீழே கல்கண்டார் கோட்டையை சார்ந்த விக்னேஷ் ஆகியோரை கைது செய்து கைதான மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான வணக்கம் சோமு போலீஸ் கையில் கிடைக்காமல் டிமிக்கி கொடுத்து கடந்த 20 நாட்களாக தலைமறைவாக உள்ளார். மேலும் தலைமறைவாக வணக்கம் சோமு மற்றும் அவர் நண்பர் ஜெயபால் மற்றும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை குற்றாலம் சென்னை கேரளா திருப்பதி என போலீஸ் போக்கு காட்டிய போலீசார் பிடிக்காமல் தண்ணி காட்டி வருகிறார். இந்த நிலையில் தற்போது திருச்சி பகுதியிலேயே டூவீலரில் வலம் வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

police


இதற்கிடையே பேராசிரியை மகாலட்சுமியை காரில் கடத்தி சென்றவர்கள் மூன்று பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தன்னை கடத்தியவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டும் வகையில் 19.10.2019 அன்று திருச்சி சிறைச்சாலையில் அணிவகுப்பு நடைபெற்றது. கைதிகள் பலரும் வரிசையாக நிற்க வைத்தனர். இதில் தன்னை கடத்தியவர்கள் யார் என பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய மூவரையும் சிறைக்குச் சென்று பேராசிரியர் அடையாளம் காட்டினார்.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய் மனுவை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இதே நேரத்தில் திருச்சியில் லலிதா ஜீவல்லரி நகைக்கொள்ளை வழக்கு கோட்டை காவல்நிலைய எல்லைக்குள் நடைபெற்றதால் போலீசார் அனைவரும் இந்த கொள்ளை வழக்கிலே ரொம்ப பிஸியாக இருப்பதால் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வணக்கம் சோமு தலைமறைவாக இருந்தவர் தற்போது திருச்சி சத்திரம் கடைவீதிகளில் டூவிலரில் சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை லோக்கல் போலீசும் கண்டுக்காமல் இருக்கிறார்களாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.