திருவிழாவிற்கு சென்ற இடத்திலும் குழந்தை பேறு இல்லாதது தொடர்பாக மீண்டும் சண்டை ஏற்பட அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தார் ராமசாமியின் சகோதரர் கணேசன். சமாதானப்படுத்தியும் ஆத்திரம் தாளாத பஞ்சவர்ணம் கணவனான ராமசாமியை கொலை செய்ய திட்டமிட்டார்.
ஏற்கனவே சண்டை நடக்கும் பொழுது ராமசாமியிடம் அடிக்கடி உணவில் விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று எச்சரிக்கும் தொனியில் மிரட்டுவாராம் பஞ்சவர்ணம். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது திட்டத்தை நிறைவேற்ற நினைத்த பஞ்சவர்ணம் தக்காளி சாதம் முட்டை பொரியல் சமைத்து அதில் எலியை கொல்ல பயன்படுத்தப்படும் விஷத்தை கலந்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் கணவனை ஆசையாக மடியில் படுக்க வைத்து உணவை ஊட்டியுள்ளார். நீதான் எனக்கு குழந்தை என்று மனைவி கொஞ்சி பேசியதை நம்பி ராமசாமியும் அந்த உணவில் விஷம் கலந்துள்ளது என்பதை அறியாமல் சாப்பிட்டுள்ளார். ராமசாமிக்கு உணவை ஊட்டி பிறகு வெளியே வந்த பஞ்சவர்ணம் ராமசாமியின் சகோதரரான கணேசன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு கணேசனை சந்தித்து கணவனுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டதை சொல்லி இன்னும் சற்று நேரத்தில் உன்னுடைய சகோதரன் இறந்து விடுவார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதை கேட்டு அதிர்ந்துபோன கணேசன் உடனடியாக ராமசாமியை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட பஞ்சவர்ணத்தை தேவிபட்டினம் போலீசார் கைது செய்துள்ளனர்.