Skip to main content

பணம் பிரிப்பதில் தகராறு... வழிப்பறி தாதா கொலை... காட்டிக்கொடுத்ததா போலீஸ்?!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வழிப்பறி மற்றும் திருட்டு தொடர்பாக இருவேறு தாதா குருப்புக்கு இடையேயான முன்விரோதத்தில் தாதா ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கமான கோஷ்டி மோதல் என்றாலும், இக்கொலைக்கு ஆதரவாக, சில போலீசார் மற்றொரு தரப்பினை காட்டிக் கொடுத்துள்ளனர் என்பது தான் தற்பொழுதைய பிரச்சனையே..!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ஒச்சதேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் நேதாஜி கொம்பூதி கிராமத்திலுள்ள சீமைக்கருவேலம் காட்டிற்குள் நேற்றிரவு (27-02-2020 ) கைகள் துண்டான நிலையில், முகம் மற்றும் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். தகவலறிந்த கமுதி காவல்துறை துணைச்சரகத்திற்குற்பட்ட கோவிலாங்குளம் போலீசார், மாவட்ட எஸ்.பி (பொறுப்பு) ராஜராஜன் ஆகியோர் சம்பவ இடத்தினை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.

 

Money Laundering Dispute.. incident ramanathapuram


"சாயல்குடி காவல் சரகத்திற்குட்பட்ட மறவர் கரிசல்குளத்தை சேர்ந்த பழனிநாதன், கோவிலாங்குளம் காவல்சரகம் ஒச்சாத்தேவன் கோட்டையை சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இருவரும் இணைந்து கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட பல குற்றங்களை செய்து வந்துள்ளனர். இது தொடர்பாக குஜிலியம்பாறை, தேவக்கோட்டை, சாயல்குடி, கடலாடி, கமுதி உள்ளிட்ட பல காவல்நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கொள்ளையடித்த சம்பவம் ஒன்றில் பணம் பிரிப்பது சம்பந்தமாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் தனித்தனி கோஷ்டியாக தொழில் செய்து வந்தனர். எனினும், இரு கோஷ்டிக்குமிடையே அடிக்கடி மோதல் நடைப்பெறும், இதனின் தொடர்ச்சியாக சமீபத்தில் சண்முகநாதன் கோஷ்டியால் ஒச்சத்தேவன்கோட்டையில் பழனிநாதன் சிறைப்பிடிக்கப்பட்டு கட்டிவைத்து உதைக்கப்பட்டுள்ளார். அதனின் தொடர்ச்சியாக பழிவாங்கும் நடவடிக்கையாக சண்முகநாதனின் தம்பி நேதாஜி கொலைச்செய்யப்பட்டுள்ளார்." என காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவர, மேற்கொண்டு எவ்வித சம்பவமும் நடைப்பெறக்கூடாது என்பதற்காக இருதரப்பையும் தேடிவருகின்றது காவல்துறை.

 

Money Laundering Dispute.. incident ramanathapuram


இதேவேளையில், " கடலாடி, சாயல்குடி மற்றும் கோவிலாங்குளம் காவல்நிலையங்களை சேர்ந்த சில போலீசாரே இவர்கள் இருதரப்பையும் தூண்டிவிட்டு பயனடைந்ததாகவும், தற்பொழுது கூட நடந்த நேதாஜி கொலையில் பழனிநாதனுக்கு தகவல் கூறியதே சில போலீசார் தான்.! இப்பொழுது கூட பழனிநாதன் மற்றும் சண்முகநாதனின் செல்போன் தொடர்புகளை ஆராய்ந்தாலே போதும்.. யார் அந்த போலீசார் என்று தெரிந்துவிடும். ஆதாயப் போலீசாரின் ஆடுபுலி ஆட்டத்தில் பழனிநாதன் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கதே.!" என்கின்றனர் நேர்மையான போலீசார். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட எஸ்.பி..?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.