ADVERTISEMENT

மண்டபம் பகுதி மக்களுக்கு மற்றொரு சோகம்...  கார்-லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி!

11:15 PM Jan 23, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோட்டைப்பட்டினத்தில் ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை இலங்கை கடற்படை கடலில் மூழ்கடித்து கொன்றது. அவர்கள் 4 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர்கள். 6 நாட்களுக்கு பிறகு 4 மீனவர்களின் சடலங்களும் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு சோகம் மண்டபம் பகுதி மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை கோடியக்கரைக்கு மீன்பிடி வலையை கொண்டுபோய் கொடுத்துவிட்டு மண்டபம் நோக்கி ஒரே காரில் பயணித்த 8 பேரும் கோட்டைப்பட்டினம் தெற்கு புதுக்குடி அருகே போய்க் கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதி மண்டபம் முகாமைச் சேர்ந்த பிச்சை மகன் கிளிஸ்ட்டாஸ்(39), மதியப்பன் மகன் சேசுப்பிள்ளை(17), தங்கச்சிமடம் எஸ்.ஆரோக்கியம்(41) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் அதே காரில் இருந்த தங்கச்சி மடத்தைச் சேர்ந்த எஸ்.சன்ராஜ்(45), எஸ்.பிராங்கிளின்(40), ஏ.கிரீன்சன்(33), ஆர்.ஜான்சன்(56), ஆர்.பாக்கியராஜ்(48) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இதைதொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இப்படி அடுத்தடுத்த துயரச் சம்பவத்தால், கிழக்கு கடற்கரை பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT