ADVERTISEMENT

முன்னாள் திமுக பெண் மேயர் படுகொலை... பதற்றத்தில் நெல்லை (படங்கள்)

12:24 AM Jul 24, 2019 | kalaimohan

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர், அவரது கணவர், வீட்டு பணி பெண் ஆகிய 3 பேரை மா்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிடடனர். நகைக்காக கொலை நடந்ததா, அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததாக என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது கணவர் முருகன்சங்கரனுடன் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி அருகே உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தார். முருகன்சங்கரன் நெடுஞ்சாலைத்துறையில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பிரியா என்ற மகள் திருச்சியில் குடும்பத்துடன் உள்ளார், அடுத்த மகள் கார்த்திகா பொற்றோர்களின் வீட்டின் அருகிலேயே உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவா் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று பிற்பகலில் உமாகேஸ்வரி, அவரது கணவர் முருகன்சங்கரன் மற்றும் வீட்டு பணி பெண் மாரி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூன்று பேரையும் கத்தியால் குத்தி விட்டு உமாமகேஸ்வரி தப்பியோடிவிட்டனர். மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

அக்கம் பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லாததால் கொலை நடந்த தகவல் பல மணி நேரம் வெளியில் தெரியவில்லை. மாலையில் அவர்களது மகள் கார்த்திகாக கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது கொலை சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவல் அறிந்ததும் மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் அா்ஜுன்சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது, தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மேலும் மூன்று பேரின் உடலையும் போலீசார் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது வீட்டு முன்பு தி.மு.க.வினர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

ADVERTISEMENT


கொலை சம்பவம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதற்கட்ட விசாரணையில் கொலையான உமாமகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த செயின், கையில் அணிந்திருந்த வளையல்கள் காணாமல் போய் உள்ளது எனவே ஆதாயத்திற்காக நடந்த கொலையாக இருக்காலம் என சந்தேகிக்கிறோம். கொலையாளிகளை பிடிப்பதற்கு காவல்துறை உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடிஅருணா அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி இரங்களைத் தெரிவித்த அவர் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கழகத்திற்கு பேரிழப்பு என்று கூறினார். கொலைச்சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைக்காக கொலை நடந்ததா அல்லது சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையான உமாமகேஸ்வரி நெல்லை மாநகரத்தின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT