ADVERTISEMENT

திருமணமான நான்காவது நாளில் நிகழ்ந்த சோகம்... புதுமணத்தம்பதி உயிரிழந்த பரிதாபம்!

05:07 PM Nov 01, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த புதுமணத்தம்பதியினர் திருமணம் ஆகிய நான்கு நாளிலேயே வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார். மருந்து விற்பனை பிரதிநிதியான மனோஜுக்கும், தாம்பரம் பெருங்களத்தூரைச் சேர்ந்த கார்த்திகாவுக்கும் கடந்த 28 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கார்த்திகா தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு மறுவீட்டுக்கு பெருங்களத்தூர் சென்ற தம்பதியினர் காரில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

பூந்தமல்லி அரக்கோணம் நெடுஞ்சாலையில் மாருதி காரில் திரும்பிக்கொண்டிருந்த நிலையில் கூவம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்த பொழுது எதிர்த் திசையில் அரக்கோணத்திலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கான்கிரீட் கலவை இயந்திரம் கொண்ட லாரி வேகமாக சாலை வளைவில் வேகமாகத் திரும்பிய நிலையில் லாரி கட்டுப்பாட்டை இழந்து தம்பதிகள் வந்த கார் மீது விழுந்தது. இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய மாருதி கார் முழுவதுமாக நொறுங்கியது. விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் காரை உடைத்து அதில் சிக்கி உயிரிழந்து கிடந்த தம்பதியினரின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநர் தப்பித்த நிலையில் லாரி ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர். மேலும் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருமணம் ஆன நான்கே நாட்களில் புதுமணத் தம்பதியினர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT