ADVERTISEMENT

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை... 24 மணிநேரத்தில் மீட்ட போலீசார்!

10:35 PM Nov 09, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று காலை கோயம்பேட்டில் கடத்தப்பட்ட 3 வயது பெண் குழந்தை தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பழ மார்க்கெட்டில் வேலை செய்துவரும் ரமேஷ்-சந்தியா தம்பதியினரின் சஞ்சனா என்ற மூன்று மாதப் பெண் குழந்தை தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று காலை கடத்தப்பட்டது. இதுதொடர்பாக, புகார் கொடுக்கப்பட்ட நிலையில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையைப் போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில், தற்பொழுது அம்பத்தூர் பகுதியில் குழந்தையை ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் தலைமையிலான போலீசார் மீட்டுள்ளனர். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT